தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 17 நவம்பர், 2010

பரணி வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி

நவம்பர் 13,2010,01:10 IST

கரூர்: கரூர் பரணிவித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு நிறுவனர் சாமியப்பன் நினைவு அறிவியல் கண்காட்சி, பள்ளி அளவிலான 18வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மாநாட்டுக்கு பள்ளி தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி, சங்கரா வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
கரூர் டி.எஸ்.பி.,சிவபாஸ்கர் பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். வாங்கல் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிலவளம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அறிவியல் மாநாடு நடந்தது. அறிவியல் கண்காட்சியில் 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் 125 அறிவியல் ஆய்வுகளும், பள்ளி அளவிலான அறிவியல் மாநாட்டில் 35 ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. முதல்வர் சுதாதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.


நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக