தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 24 நவம்பர், 2010

திருத்தணி :தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

நவம்பர் 24,2010,00:42 IST

திருத்தணி : மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகளின் அறிவியல் மாநாடு திருத்தணியில் நடந்தது.திருத்தணி அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் ஜெய்ஸ்ரீ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகளின் அறிவியல் மாநாடு நடந்தது. அறிவியல் இயக்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தர் வரவேற்றார்.இதில் திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு நிலவளம், அறிவியல் இயக்க செயல்பாடுகள் மற்றும் தற்போது அறிவியல் வளர்ச்சி குறித்து கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியில் சுதந்திர மெட்ரிக் பள்ளியும், ஆர்.கே.தெரு பள்ளியும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி தாளாளர் ரவி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.


நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக