தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 17 நவம்பர், 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

ஆகஸ்ட் 31,2010,02:30 IST

ராசிபுரம்: மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் மாவட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது. மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பள்ளி தலைவர் ஆடிட்டர் சேகர், செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுந்தரராஜன், முதல்வர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


நன்றி: தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக