தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

செவ்வாய், 23 நவம்பர், 2010

காஞ்சி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு

சென்னை
குழந்தைகள் அறிவியல் மாநாடு

First Published : 23 Nov 2010 01:54:37 PM IST


உத்தரமேரூர், நவ. 22: உத்தரமேரூர் தாலுகா ரெட்டமங்கலம்
ஆதிதிராவிட நல அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான 18-வது தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடந்தது.

உத்தரமேரூர் கிளைத் தலைவர் சிவா.அன்பழகன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் இ.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் த.பாரதிராஜா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.தீனதயாளன், மாவட்ட செயலாளர் ஜி.முனுசாமி வாழ்த்தி பேசினர். ரெட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜி.பூபாலன் மரக்கன்றுகளை
நட்டார்.

மாலையில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் லோ.வரகுணபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் எ.வீரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறிவியல் பிரசார ஒருங்கிணைப்பாளர் எ.குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் எ.அருண்பிரசாத் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார்.

காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் பி.பரமசிவம், உத்தரமேரூர் வேளாண் அலுவலர் வி.ராஜதுரை
மதிப்பீட்டுரையாற்றினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.முருகன் இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட பொருளாளர் டி.குமார் நன்றி கூறினார்.
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக