தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 21 ஜூலை, 2010

செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்


18 & 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..2010 - 2011
மையப் பொருள் : நிலவளங்கள்
பேரா.சோ.மோகனா,
மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்,
NCSC 2010-2011
அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு பற்றிய குறிப்பு..:
செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்...
  • ஆய்வு செய்யும் குழந்தைகள் 10௦-17 வயதினராய் இருக்க வேண்டும்.
  • அவர்களின் வயது டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ,, அதுவே அவர்களின் ஆய்வுக் குழுவின் வயதாகும்,
  • 10 -13 வயதினர் இளநிலை/கீழ் நிலை என்றும், 13+ -17 வயதினர்,முது நிலை/ மேல் நிலை என்று சொல்லப் படுகிறது.
  • கீழ்நிலை/இளநிலை மாணவர்கள்(10 -13 ), 2 ,500௦௦ வார்த்தைகளும், மேல்நிலை / முதுநிலை மாணவர்கள் (13+ - 17) 3500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.
  • மேலும், ஒரு குழுவில் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின் வயதாகும்.
  • குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம். பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யலாம்.வயது மட்டுமே ஆய்வுக்கான நிர்ணயம். முறைசாரப் பள்ளி,/இரவுப் பள்ளி/சிறார் பள்ளி/துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள் செய்யலாம்.
  • ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • குழந்தைகள், கட்டாயமாய் 2 -5 பேர் கொண்ட குழுவாகத்தான் செய்ய வேண்டும்.
  • தனி ஒருவராக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கூடாது.
  • ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வேண்டும்.
  • அவர் பள்ளி ஆசிரியராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ,அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
  • பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்தால், அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். . ,
  • .ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
  • ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
  • மாவட்ட எல்லை தாண்டுதல் கூடாது.
  • தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும்.
  • அதே போல் ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்
  • கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளிலும் ஆய்வு செய்யக் கூடாது.
  • மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும் .ஆய்வு செய்யக் கூடாது.
  • ஆய்வறிக்கையை இணையதளத்தில் இருந்து இறக்கி போடக்கூடாது.
  • ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம்.
  • ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 4 நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம் மட்டுமே இருக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக உள்ள நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது.
  • கட்டாயமாக VCD அனுமதிக்கப்பட மாட்டாது.
  • ஆய்வறிக்கைக்கானசெலவைரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும். ( தினசரி..நாட்குறிப்பு போலத்தான் அது.)
  • மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள் தட்டச்சு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
  • மாவட்ட மாநாட்டின் பொது கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். ,
  • LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது.
  • ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும்,குழந்தைகள், ஒரு 5 பக்கம் ,மாநாட்டிற்குப்பின் என்ன செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள்,
  • குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம் சொல்லவேண்டும்.
  • குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8 நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டும்.
  • வழிகாட்டி ஆசிரியர்கள் குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் , செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப் போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும் இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக