தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

வெள்ளி, 31 டிசம்பர், 2010

National Children's Science Congress (NCSC) 2010 - 18 Session - Day 4

30Dec2010
Day 4 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

National Children's Science Congress (NCSC) 18th Session - Day 3

29Dec2010
Day 3 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

National Children Science Congress (NCSC) 18 Session - Day 2

28Dec2010
Day 2 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

18th National Children's Science Congress (NCSC) - Day 1

27Dec2010
Day 1 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2010,03:57 IST

எழுமலை : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட எழுமலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் காமேஷ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க எழுமலை கிளைத் தலைவர் சடையாண்டி வரவேற்றார். பாரதியார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் பொன்.கருணாநிதி, பாண்டியன், சுதாகர். நல்.தங்கராஜ், சந்தனம், விவோகானந்த நடுநிலைப் பள்ளி செயலாளர் சிவநேசன் துரைராஜ், ஆசிரியர்கள் செந்தில்குமார், சிவக்குமார், உதவித் தலைமையாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் பாராட்டிப் பேசினர். அறிவியல் மாநாட்டில் மாநில அளவில் கலந்து கொண்ட சிவரஞ்சனி குழுவினரை அறிவியல் இயக்க செயலாளர் அழகுமணி அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கருணாநிதி தொடங்கிவைத்தார்

சென்னை, டிச 27-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வும், மனப்பான்மையும் உருவாக்குவதற்காக சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் 1981-ம் ஆண்டு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டது.
தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1991-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மிக முக்கிய பங்காற்றியது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் அங்கமான தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1993-ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை தமிழகத்தில் நடத்தி வருகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயதுக்குட் பட்ட குழந்தைகள் தங்கள் அறிவியல் மனப்பான்மை யினையும், அறிவையும் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க ஒருங் கிணைந்த வாய்ப்பினை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உருவாக்கித் தருகிறது.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமல்லாது இடைநின்ற குழந்தைகளும், பள்ளி சாரா குழந்தைகளும் பங்கேற்கும் வாய்ப்பினை இது அளிக்கிறது. இது எதிர்கால இந்தியாவைப் பற்றி ஒரு கனவினை குழந்தைகளிடையே உருவாக்குகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைந்த கருபொருளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டமைப்புடன் இணைந்து 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாது காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடத்துகிறது.
இம்மாநாட்டில் மாநில அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700 குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களும், தெற்காசிய நாடுகளை சேர்ந்த 40 மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த 5 நாள் அறிவியல் திருவிழாவை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து பல முக்கிய அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 31-ந்தேதி நடைபெறுகின்ற மாநாட்டு நிறைவு விழாவில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நன்றி: மாலைமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2010,04:14 IST
பல்லாவரம் : பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் மற்றும் வேல்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து, 18வது தேசிய சிறார் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை ஐந்து நாட்களுக்கு நடத்துகின்றன. இதன் துவக்க விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், நேற்று நடந்தது. தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார்.
அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து. முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பத்து முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், இந்த கண்காட்சி அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் படிப்பில் மட்டுமல்லாமல் சமுதாய பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதற்கு இது போன்ற கண்காட்சிகள் ஒரு வாய்ப்பாக அமையும். அறிவியல் மாநாட்டு "நில வளம் - வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் வளத்திற்கு நிலமும், நீரும் மிக முக்கியமானது. இன்றைய நிலையில் இவை இரண்டும் மிக நெருக்கடியான நிலையில் தான் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, தான் தமிழகத்தில் விவசாயத்தில் நவீன முறையை கையாண்டு உற்பத்தியை அதிகரித்துள்ளோம். ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், நிலத்தின் பயன்பாடு அதிகம் பாதிக்கிறது. நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள 1.3 கோடி எக்டர் நிலப் பரப்பில், 2.8 சதவீதம் மட்டுமே விளை நிலமாக உள்ளது. சுற்றுச் சூழலையும், நிலப் பரப்பினையும் பாதுகாக்கும் வகையில், ஜப்பான் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் 686 கோடி ரூபாய் மதிப்பில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும். அதற்கு இந்த கண்காட்சி ஒரு வரப் பிரசாதமாக அமையும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அறிவியல் இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, வேல்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் மற்றும், தமிழகம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்