தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

செவ்வாய், 22 நவம்பர், 2011

மாநில அளவிலான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அழைப்பிதழ்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

சென்னை


First Published : 17 Nov 2011 09:50:36 AM IST


திருத்தணி, நவ. 16: திருத்தணியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு அறிவியல் படைப்புகளை செய்து காட்டி பரிசுகளை பெற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருத்தணி அரசு மகளிர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொருளார் எம்.மகாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோபி வரவேற்றார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெ. நாகேந்திரன் அறிமுக உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ. ரவி கலந்துகொண்டு குழந்தைகள் அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து இளம் அறிவியல் விஞ்ஞானிகளை வாழ்த்தி பேசினார்.

மாலை 4-மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட தலைவர் டாக்டர். ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் பி.முருகேசன், உதவி தொடக் கல்வி அலுவலர் எம்.தணிகாசலம் (பொறுப்பு), மாவட்ட செயலர் டி.வி. அருண வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ. பாலசந்தர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி நகர மன்ற தலைவர் டி.சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் மாசிலாமணி, நகர மன்ற உறுப்பினர்கள் கேபிள் எம்.சுரேஷ், செல்வகுமார், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அ.கலைநேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி: தினமணி

சென்னை அறிவியல் கண்காட்சிக்கு நகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்வு


பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011,01:14 IST

கரூர்: சென்னை மற்றும் சத்தியமங்கலத்தில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை வைக்க கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட அளவிலான இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் வைத்த மனித ஆற்றல் மூலம் பல்வகை செயல்பாடு என்ற அறிவியல் படைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவன் பிரவீன் விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மேலும், 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பிரகாஷ்வேல், ரமேஷ், நவீன், பாரதி, தாஹூர் செய்த கடவூர் மலைப்பகுதியில் இயற்கை வளங்களை அழித்தால் ஏற்பட விளைவுகள் குறித்த படைப்பும் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் வரும் 24 ம் தேதி மற்றும் 25 ம் தேதிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சண்முகவடிவு, அறிவியல் ஆசிரியர்கள் கண்ணகி, இளஞ்செழியன், ஆரோக்கிய பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.

நன்றி: தினமலர்

Junior scientists felicitated

VELLORE, November 16, 2011


SPECIAL CORRESPONDENT
SHARE · PRINT · T+

Five students of the Mangalambal Aided Middle School, Walajapet – U. Madhina, P. Rithika, M. Akthar, S. Suresh and P. Arul Jothi – who were selected Junior Scientists at the 19th District Level National Children's Science Congress (NCSC) 2011 conducted at the Spark Matriculation School here recently, and the teachers who guided them, were felicitated by V. Sivakamasundari, Secretary and Headmistress of the school on Children's Day.

The 19th District Level NCSC 2011 was conducted by the National Council for Science and Technology Communication (NCSTC) Network, the Department of Science and Technology, Government of India and the Tamil Nadu Science Forum on the theme, ‘Land Resources: Use for Prosperity, Save Posterity'. The above students, studying in Class VI to VIII were awarded certificates for their critical observations, scientific thinking and skilful presentation of their project report on ‘Soil Management'.

They would be participating in the State-level NCSC to be held at Erode on November 23.

Source: The Hindu

விஞ்ஞானிகள் மாநாடு: 10 பள்ளிகள் தேர்வு


பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2011,00:40 IST

மதுரை : ஈரோடு சத்தியமங்கலத்தில் நவ.,24 முதல் 26ம் தேதி வரை நடக்கும் மாநில இளம் விஞ்ஞானிகள் மாநாட்டிற்கு, மதுரையைச் சேர்ந்த 10 பள்ளிகளின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன்னோட்டமாக, மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான மாநாட்டில், 00 இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். செயலாளர் கடசாரி வரவேற்றார். என்.சி.சி., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ஆய்வுகள் பற்றி விளக்கினார். பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல் நிர்வாகி வாசுதேவன், என்.சி.எஸ்.சி., மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா பங்கேற்றனர். மண்வளத்தை மேம்படுத்தும் உரம் குறித்து பல்கலை நடுநிலைப்பள்ளி, நிலைத்தகு மண் வளம் - மகாத்மா மெட்ரிக் பள்ளி, வளமான மண்ணிற்கு அமிர்த நீர் - பாப்புநாயக்கன்பட்டி எஸ்.கே.வி. பள்ளி, நிலவளமேம்பாட்டில் உயிரி உரங்கள் - செயின்ட் ஜோசப் பள்ளி, மண்வளத்தை பராமரிப்பதில் மனிதனின் பங்கு - பொதும்பு துளிர் இல்லம், பள்ளி வளாகத்தில் மரத்தில் மூடாக்குதல் முறை- ஆனையூர் துளிர் இல்லம், பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்களினால் மண்ணில் ஏற்படும் தாக்கம் - எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மண்வளத்தை இயற்கை முறையில் பாதுகாத்தல் - எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் பள்ளி, குவாரியினால் ஏற்படும் விவசாய பாதிப்புகள் - பராசக்தி பள்ளி ஆகியவற்றின் ஆய்வுகள், மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன

நன்றி: தினமலர்

17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்

திருச்சி


First Published : 08 Nov 2009 02:38:52 AM IST


திருவெறும்பூர், நவ. 7: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கௌரவத் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இயக்குநருமான முனைவர் ந. மணிமேகலை தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில செயலாக்க குழு க. சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் எம். கவனகன் அறிமுக உரையாற்றினார்.

மாநாட்டை தொடக்கி வைத்து, தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் பேராசிரியர் மா. சிதம்பரம் பேசியது: மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொணரவே இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர்.

தேசிய தொழில் நுட்ப கழகத்தின் துறைகளின் தலைவர் பெ. ஜெயபாலன் வாழ்த்தி பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.மா. சபரிகுமார் நடுவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சு. நடராசன் வரவேற்றார். நிறைவில், மாவட்டத் தலைவர் செ. திருமுருகன் நன்றி கூறினார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாவட்டத்தின் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
நன்றி: தினமணி

17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்

திருச்சி


First Published : 08 Nov 2009 02:38:52 AM IST


திருவெறும்பூர், நவ. 7: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கௌரவத் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இயக்குநருமான முனைவர் ந. மணிமேகலை தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில செயலாக்க குழு க. சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் எம். கவனகன் அறிமுக உரையாற்றினார்.

மாநாட்டை தொடக்கி வைத்து, தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் பேராசிரியர் மா. சிதம்பரம் பேசியது: மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொணரவே இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர்.

தேசிய தொழில் நுட்ப கழகத்தின் துறைகளின் தலைவர் பெ. ஜெயபாலன் வாழ்த்தி பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.மா. சபரிகுமார் நடுவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சு. நடராசன் வரவேற்றார். நிறைவில், மாவட்டத் தலைவர் செ. திருமுருகன் நன்றி கூறினார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாவட்டத்தின் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
நன்றி: தினமணி

குழந்தைகள் அறிவியல் மாநாடு: கூடலூர் மாணவர்கள் தேர்வு

கோயம்புத்தூர்


First Published : 18 Nov 2010 10:16:33 AM IST


கூடலூர், நவ 17: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு, கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக நடத்தப்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வில், இப்பள்ளியைச் சேர்ந்த ஐரின், பிரியா, சுப்கஷா, சுனில், அபிலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், வெட்டி வேர் புல்லை வளர்த்து, மண் அரிப்பைத் தடுப்பதுடன், மண் வளம், ஈரப்பதம், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: தினமணி

தேசிய அறிவியல் மாநாட்டுக்கு புகளூர் அரசு பள்ளி மாணவிகள் படைப்பு தேர்வு.

வேலாயுதம்பாளையம்: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வைக்க புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட அளவிலான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கரூர் பரணி பார்க் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 175 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை பள்ளி மாணவர்கள் சமர்பித்தனர். அதில் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிஆசிரியர் ராமசாமி வழி காட்டுதலின் பேரில் ப்ளஸ்1 மாணவிகள் தேவிகா, புவனேஷ்வரி, சங்கவி, யுவராணி, வினோதினி ஆகியோர் சமர்பித்த "அருகி வரும் பயிர்கள் - ஓர் ஆய்வு' என்ற ஆய்வுக் கட்டுரை, செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கவுள்ள மாநில அளவிலான 19வது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் ஆசிரியர் முரளி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தீபிகா, வித்யாராணி, புனிதா, கவிதா, தமிழ்ச்செல்வி ஆகியோர் சமர்பித்த "தரிசு நிலம் மற்றும் தாவரங்கள் நிறைந்த நிலத்தில் உள்ள உயிரின வேறுபாடு ஓர் ஆய்வு' என்ற ஆய்வுக் கட்டுரையானது சிறந்த ஆய்வுக் கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் படைப்புகளை கண்டுப்பிடித்த மாணவிகள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முருகேசன் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பி.டி.ஏ., நிர்வாகிகள், கிராம கல்விக்குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


நன்றி: தினமலர்

மாநாட்டின் 9 கட்டுரைகள்: மாநில போட்டிக்கு தேர்வு



பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2011,01:05 IST

கூடலூர் : கூடலூரில் நடந்த 13வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 9 ஆய்வு கட்டுரைகள், மாநில மாநாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.நீலகிரி மாவட்ட அளவிலான 13 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கூடலூர் ஜி.டி.எம்.ஒ., பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்ட தலைவர் ஜெயன்லாப்தீன் வரவேற்றார். மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சரவணவடிவு பேசினார். கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மீராசேகர், வேளாண்மை துறை அலுவலர்கள் ரமேஷ், ரகு, கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் சித்ரா, ஸ்ரீத்ரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாநாட்டில் "மண்' என்ற தலைப்பில் மாணவர்கள் 88 ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தனர்.இதில், மார்னிங் ஸ்டார் பள்ளியிலிருந்தும், ஐடியல் மெட்ரிக் பள்ளியிலிருந்தும் தலா 2 ஆய்வு கட்டுரைகள், கூடலூர் புனித தாமஸ், தேவர்சோலை ஹோலிகிராஸ், ஹல்அமீன் மெட்ரிக் மற்றும் நீலகிரி மெட்ரிக் பள்ளிகளிலிருந்து தலா 1 ஆய்வு கட்டுரை, பள்ளி அல்லாத தொழில் இல்லத்தலிருந்து 1 கட்டுரை என மொத்தம் 9 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. ஜி.டி.எம்.ஓ., மெட்ரிக் பள்ளி முதல்வர் தேவராஜ் நன்றி கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட 9 கட்டுரைகளும் இம்மாதம் சக்தியமங்கலம் பன்னாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் நடக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு போட்டியில் சமர்பிக்கப்பட உள்ளது,' என அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது.


நன்றி: தினமலர்

அறிவியல் கண்காட்சியில் விநாயகா வித்யாலயா பள்ளிக்கு முதல் பரிசு


நவம்பர் 17,2011,01:17 IST

சேலம்: சேலத்தில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், விநாயகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
"தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு' சார்பாக ஆண்டுதோறும், தேசிய அறிவில் கண்காட்சி, "நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்' நடந்தது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 70 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. சேலம் ஃபேர்லாண்ட்ஸ் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர், "நீடித்த நிலையான கரும்பு சாகுபடி' என்ற தலைப்பில் குறைந்த நீரை கொண்டு, இரு மடங்கு மகசூல் பெறுவது பற்றி செயல்முறை மூலம் நிரூபித்து, முதல் பரிசை பெற்றனர்.


நன்றி: தினமலர்

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ராமகிருஷ்ணா பள்ளி தேர்வு



First Published : 17 Nov 2011 09:20:57 AM IST


சிதம்பரம், நவ. 16: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. அண்மையில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமர்ப்பித்த நெய்வேலி சுரங்க மண்ணின் பண்புகள்- ஒர் ஆய்வு என்ற ஆய்வறிக்கை தேர்வு பெற்றது.

ஆர்.ஜெயஸ்ரீ தலைமையில் எம்.மரியா தில்வேனியா, பி.அக்ஷயா, ஏ.அஜ்மீரா, பி.ஷப்னா ஆகியோர் இந்த ஆய்வறிக்கையை சமர்பித்திருந்தனர். அதில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மண் காரத்தனமை உடையதாக உள்ளது. இம்மண்ணை அமிலத்தன்மை உடைய நிலத்தில் சேர்த்தால் நடுநிலைப்படுத்தப்படும் என்பதே அம்மாணவிகளின் கண்டுபிடிப்பாகும். மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் எம்.கே.பன்னீர்செல்வம், எம்.சிவகுரு, ஜே.பி.சங்கரன் ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் ரத்தின.பாலசுப்பிரமணியன், ரத்தின.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டினர்.
நன்றி: தினமணி

District-level conference

TIRUNELVELI, November 16, 2011

The 19th National Children's Science Forum's district-level conference was held here on Tuesday.

Mayor, Tirunelveli Corporation, Vijila Sathyanand, inaugurated the conference, which was presided over by Tamil Nadu Science Forum's Tirunelveli district president S. Eswara Pandi.

District Science Officer, Tirunelveli Science Centre, D. Seetharam, headmaster, St. Xavier's Higher Secondary School, Palayamkottai, Rev. Fr. M.A. Innaci, headmaster, St. John's Higher Secondary School, Palayamkottai, M. Jayaraj Victor and others spoke at the district-level conference.

Thanks: The Hindu

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ராமகிருஷ்ணா பள்ளி தேர்வு

First Published : 17 Nov 2011 09:20:57 AM IST


சிதம்பரம், நவ. 16: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. அண்மையில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமர்ப்பித்த நெய்வேலி சுரங்க மண்ணின் பண்புகள்- ஒர் ஆய்வு என்ற ஆய்வறிக்கை தேர்வு பெற்றது.

ஆர்.ஜெயஸ்ரீ தலைமையில் எம்.மரியா தில்வேனியா, பி.அக்ஷயா, ஏ.அஜ்மீரா, பி.ஷப்னா ஆகியோர் இந்த ஆய்வறிக்கையை சமர்பித்திருந்தனர். அதில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மண் காரத்தனமை உடையதாக உள்ளது. இம்மண்ணை அமிலத்தன்மை உடைய நிலத்தில் சேர்த்தால் நடுநிலைப்படுத்தப்படும் என்பதே அம்மாணவிகளின் கண்டுபிடிப்பாகும். மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் எம்.கே.பன்னீர்செல்வம், எம்.சிவகுரு, ஜே.பி.சங்கரன் ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் ரத்தின.பாலசுப்பிரமணியன், ரத்தின.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டினர்.
நன்றி: தினமணி

திங்கள், 14 நவம்பர், 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: காரங்காடு பள்ளி தேர்வு

First Published : 14 Nov 2011 01:18:30 PM IST


தக்கலை, நவ. 13:÷ஈரோட்டில் மாநில அளவில் நடைபெறும் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க காரங்காடு புனித அலோசியஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வாகினர். குழிவிளை பகுதியில் முந்திரி மரம் குறைதலும், மண்வளம் பாதுகாத்தலும், அதை மேம்படுத்துதலும் என்ற தலைப்பில் பள்ளித் தலைமைஆசிரியர் எம்.ஒய்.என். ஆன்டனி அம்மாள் அனுமதியுடன் ஆசிரியர் ம. லீமாரோஸ் வழிகாட்டுதலில் 9-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ், அஸ்வின் செனட், அஞ்சுமதி, ஸ்டெர்லின், ஸ்னோ, ஜெனிஷா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் இம் மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரையை ஆய்வுக்குழு தேர்வு செய்தது. இதையடுத்து, இப் பள்ளி மாணவர்கள் ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நவம்பர் 25-ல் நடைபெறும் மாநில அளவிலான 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வாகினர். தேர்வுபெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் அருள்பணி ஜெயப்பிரகாஷ், மேலாளர் அந்தோனிமுத்து மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நன்றி; தினமணி

காரைக்குடியில் குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாடு

First Published : 12 Nov 2011 12:22:23 PM IST


காரைக்குடி, நவ. 11: காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செலக்ட் அரிமா சங்கம் ஆகியன சார்பில் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவர் அரு. கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க காரைக்குடி கிளைத் தலைவர் என். முருகன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் சி. சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.அரிமா சங்க முன்னாள் ஆளுநர் விஆர். சின்ன அருணாசலம் சிறப்புரையாற்றினார்.

மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டு 60 தலைப்புகளில் ஆராய்ச் சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதில் தமிழ்வழிப் பள்ளிகளான காரைக்குடி எஸ்எம்எஸ்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, படமாத்தூர் சக்தி உயர்நிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, சருகணி புனித பால் உயர்நிலைப் பள்ளி, ஆங்கில வழிப் பள்ளிகளான திருப்பத்தூர் பாபா அமிர் பாதுஷா, கல்லல் சாந்திராணி மெட்ரிக் பள்ளி, புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கட்டுரைகள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் நவ. 26-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் டாக்டர் கே. ரகுபதி, மாவட்டச் செயலாளர் பி. சாஸ்தா சுந்தரம், டாக்டர் சையது முகமது, பேராசிரியர் என். ஜானகிராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

முடிவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
நன்றி: தினமணி

அறிவியல மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட 7 பள்ளிகளின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில போட்டிக்குத் தேர்வு

நன்றி: தினத்தந்தி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2011,22:55 IST

காரைக்குடி : செலக்ட் லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து காரைக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தியது. லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் அறிமுகவுரையாற்றினார். 35 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 75 பேர் நிலவளம் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ரகுபதி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சேதுராமன், ஆசிரியர் சுந்தரராமன், மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர்

குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு: மாணவர்களுக்கு பரிசளிப்பு

First Published : 13 Nov 2011 12:58:37 PM IST


புதுக்கோட்டை, நவ. 12: புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

மாநாட்டில், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில், சுந்தப்பட்டி, ராஜாகுளத்தூர், மேலப்பட்டி, குப்பையன்பட்டி, மோகனூர், மஞ்சப்பேட்டை, வெள்ளாளவிடுதி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேல்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாநாட்டுக்கு, கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல். பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அறிவியல் பிரசார அமைப்பாளர் எம். முத்துக்குமார், கிங்டவுன் ரோட்டரி சங்க செயலர் எஸ். கணேசன், மாநில செயற் குழு உறுப்பினர் சி. கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் க. ஜெயபாலன், துணைத் தலைவர்கள் சி. சேதுராமன், அ. மணவாளன், பொருளர் எம். வீரமுத்து, ஏ. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சை. மஸ்தான்பக்ருதீன் வரவேற்றார். நகரச்செயலர் எம். பழனிச்சாமி நன்றி கூறினார்.
மூலம் : தினமணி

Students show way for preserving land resources for posterity

A section of the participants of the National Science Congress in the city on Sunday. Photo :R.M. Rajarathinam
A section of the participants of the National Science Congress in the city on Sunday. Photo :R.M. Rajarathinam

It took a science project to convince an entire village to switch to bio fertilizers. Five school kids, barely 13 years, worked at patches of their parents' farm land every evening after school. They ploughed the land, sowed the seeds and watered them.

“My father asked me how do you know chemical fertilizers harm the soil? So we decided to prove it,” says Shankar, leader of the five member team, from Government Higher Secondary School, Uthukuli, who submitted a science project for the National Science Congress to prove bio fertilizers can increase soil fertility. Three months was all they had – but after hard labour, awareness rallies and survey of over 100 farmers, today they have many believers.

“No one refused to believe us when we said Rs.6 would do for buying these fertilizers, as most spend anywhere between Rs.500 – Rs.1000. By our project, we proved that chemical fertilizers may give a good yield during the initial years, but the land soon falls barren and is suitable only for plots,” says N.Senthilkumar. “Green manure does not get washed away like chemical fertilizers and even if it gets mixed with water sources, there is no harm.”

The unbridled enthusiasm exhibited by the students reflected in the in-depth analysis and research backing the projects.

The presentation of the winning projects bore semblances of a Ph D or postgraduate research project, concurred organisers of the district leg of the congress sponsored by the Department of Science and Technology and organised by the Tamil Nadu Science Forum at Mariamman College of Education here on Sunday.

With the theme ‘Land resources- use for prosperity, save for posterity', the programme aims at encouraging critical and analytical skills of children.

The competition was held in two categories, Junior (10-13) and Senior (14-17). Around 385 guide teachers were imparted training on methodology, and 151 projects from 52 schools were registered. But only 81 projects from Lalgudi, Musiri and Tiruchi educational districts have turned up, said Suba, coordinator, district conference.

On the numbers behind, Rajendran, registrar, Shivani College, said not many schools were willing to encourage students to continue field work for three months. Projects in the past had effected-in many socio-economic changes, besides spurring participants to pursue research.

After a two phase evaluation comprising written report and viva voce, ten projects were chosen for the state congress to be held at Bannariman Institute of Technology by a panel of judges constituting of experts in basic sciences from Bharathidasan University.

Thirty projects from Tamil Nadu would make it to the national finals at Jaipur, where the winners would be presented with ‘Young Scientist awards' by the Prime Minister. A scientists meet, session for school teachers on ‘Requirements and challenges of nuclear energy' and seminars on ‘International Year of Forests- a perspective' and ‘Chemistry in everyday life' marked the two-day conference.

The programme was hosted by Shivani Group of Institutions and supported by NCSTC Network.

Source: The Hindu